×

எர்ணாகுளம் அருகே வீட்டில் பதுக்கிய 4 துப்பாக்கிகள் பறிமுதல்


திருவனந்தபுரம்: எர்ணாகுளம் அருகே தீவிரவாதத் தடுப்புப் படையினர் நடத்திய அதிரடி சோதனையில் ஒரு வீட்டிலிருந்து லைசன்ஸ் இல்லாத 4 துப்பாக்கிகள், 2 கத்திகள் மற்றும் ₹10 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது. எர்ணாகுளம் அருகே உள்ள ஆலங்காடு பகுதியில் ஒரு வீட்டில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக எஸ்பி வைபவ் சக்சேனாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அவரது தலைமையில் தீவிரவாதத் தடுப்பு படையினர் அப்பகுதியில் பல வீடுகளில் சோதனை நடத்தினர்.

இதில் ஆலங்காடு பகுதியிலுள்ள ரியாஸ் என்பவரின் வீட்டில் இருந்து லைசென்ஸ் இல்லாத 2 ரிவால்வர்கள், 2 பிஸ்டல்கள், 2 கத்திகள் மற்றும் ₹10 லட்சம் பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டன. ரியாஸ் ஆலுவா பகுதியைச் சேர்ந்த ஒரு பிரபல ரவுடியின் அடியாளாக இருந்து வந்துள்ளார். இவரை பல மாதங்களாக போலீசார் கண்காணித்து வந்தனர். ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது தொடர்பாக ரியாசை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post எர்ணாகுளம் அருகே வீட்டில் பதுக்கிய 4 துப்பாக்கிகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Ernakulam ,Thiruvananthapuram ,Alangadu ,
× RELATED கேரளாவில் 4 நாட்களுக்கு பலத்த மழை